தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக, வலம் வரும் நடிகை சமந்தா, நாக சைதன்யாவுக்கு முன்பே ஒருவரை காதலித்ததாக பகீர் கிளப்பி உள்ளார்.
சமந்தா பகீர் :
தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் நாக சைதன்யாவுடனான விவாகரத்து முடிவுக்கு பின், தனது சினிமா கேரியரில் பிஸியாக இருந்து வருகிறார். அண்மையில் காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தங்களது விவாகரத்து குறித்தும் நாக சைதன்யா குறித்தும் பகிரங்க கருத்துகளை முன் வைத்தார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள், தன்னுடைய முதல் காதல் பற்றி சமந்தா ஓப்பனாக பேசியுள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, நாக சைத்தன்யாவை காதலிப்பதற்கு முன், ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் நடிகை சாவித்திரி போல் நானும் பிரச்சனைகளை சந்தித்துள்ளேன், அந்தக் காதல் நல்ல வகையில் முடியவில்லை. பின்னர் எனக்கு நாக சைதன்யா போன்ற ஒரு கணவர் கிடைத்தது அதிர்ஷ்டம் என வெளிப்படையாக கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.