டோலிவுட் தாண்டி தற்போது பாலிவுட் வரை தன் திரைப்பயணத்தை விரிவுப்படுத்தியுள்ளவர் நடிகை சமந்தா. அதுவும் விவகாரத்திற்கு பின்னர் இவரின் கேரியரில் சறுக்கல் ஏற்படும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஏனென்றால் அசுர வேகத்தில் படங்களில் கமிட்டாகி வருகிறார். மேலும் புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடவும் சமந்தா ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் இதற்காக ஒரு கோரிக்கை ஒன்றை சமந்தா இயக்குனருக்கு வைத்துள்ளார்.
அதாவது ஐதராபாத் நகரை விட்டு தள்ளி ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த பாடலின் படப்பிடிப்பை நடத்த கேட்டுக்கொண்டாராம் சமந்தா. ஏற்கனவே விவாகரத்து சர்ச்சையில் சிக்கியுள்ள சமந்தா ஐதராபாத்தில் ஷூட்டிங் வைத்துக்கொண்டால் தேவையில்லாமல் மீடியாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டுமே என இந்த வேண்டுகோளை விடுத்துள்ளாராம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்