தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவருக்கும் நாக சைதன்யாவிற்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண உறவு 4 வருடங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் நகர்ந்தது.
ஆனால் தற்போது சமந்தாவிற்கும், நாகா சைதன்யாவிற்கும் இடையே மிக பெரிய போர் நிலவி வருவதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. மேலும் நாகா சைதன்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சமந்தா கலந்து கொள்ளவில்லை. இது ஏற்கனவே பரவும் வதந்தியை உறுதி செய்வது போலயே இருந்தது. மேலும் அவர் ஐதராபாத்தை விட்டு மும்பைக்கு செல்வதாகவும் பேச்சுக்கள் அடிபட்டது.
இந்நிலையில் சமந்தாவே தன் வாயால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது இன்ஸ்டாவில் தன் ரசிகர்களிடம் உரையாடிய சமந்தா, நீங்கள் மும்பை செல்ல போகிறீர்களா? என்ற ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது “ஐதராபாத் தான் எனது வீடு, எப்போதும் எனக்கு வீடு. நான் இங்கேயே தான் வசிப்பேன். எப்படி இப்படி எல்லாம் வதந்தி பரவுகிறது என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்