டோலிவுட், கோலிவுட் என கலக்கி வரும் நடிகை சமந்தா. அதுவும் சமீப காலங்களாக இவர் நடிக்கும் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களின் கதைகள் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்துபவையாக உள்ளதால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
சென்னை, பல்லவரத்தை சேர்ந்த பெண்ணான சமந்தா, வெள்ளித்திரையில் தன் கால்பதித்த பின்னர் தன் கடும் முயற்சியால் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர். இவருக்கு டோலிவுட்டில் முதல் வெற்றி படம் விண்ணை தாண்டி வருவாயா.
அதில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன், நாக சைதன்யா நடித்து இருந்தார். முதல் பார்வையிலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இரு விட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார் சமந்தா.
திருமணத்திற்கு முன்பு சமந்தாவிற்கு டோலிவுட்டில் எவ்வளவு மார்க்கெட் இருந்ததோ அதே அளவு இன்றும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் நடிக்கும் படங்கள்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், பூக்களுக்கு நடுவே எடுக்கப்பட்ட தன் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ தற்போது ரசிகர்களின் வர்ணிப்புக்கு உள்ளாகி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்