தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக பார்க்கப்படும் நடிகை சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவார்த்தமான வார்த்தைகளுடன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் அள்ளுகிறது.
சமந்தா
தமிழ் ரசிகர்கள் மனதில் என்றுமே நீங்காத இடத்தினை பிடித்திருப்பவர் தான் நடிகை, சமந்தா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரைப்படங்களின் மூலமாக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். ஆனால், நடிகை சமந்தா எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு ஆரம்பத்தில் தமிழ் சினிமாத்துறை கை கொடுக்கவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால், இவர் தெலுங்கு சினிமாவில் முதன் முறையாக “விண்ணை தாண்டி வருவாயா” திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். இதனை அடுத்து அந்த திரைப்படம் மெகா ஹிட் அடித்தது.
அந்த திரைப்படத்தினை தொடர்ந்து சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். இதனை அடுத்து தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.
கொரோனா விதிமுறைகளை மீறியதாக கமல் மீது வழக்கு – போலீசார் நடவடிக்கை!!
பின், தொடர்ச்சியாக அனைத்து மொழி படங்களிலும் கவனம் செலுத்தி இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். திருமணம் முடிந்த பிறகும் கூட சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தொடர்ச்சியாக சில தத்துவார்த்தமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகின்றது. அதே போல் அந்த புகைப்படங்கள் சற்று வித்தியாசமாகவே இருக்கிறது.