தென்னிந்திய அளவில் முக்கிய நடிகையாக விளங்குபவர் சமந்தா. இவர் சில நாட்களுக்கு முன் தான் தன் கணவர் நாக சைத்தன்யாவை பிரியப்போவதாக அறிவித்தார். இது இவரின் கேரியரில் துளி கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
ஏனெனில் முன்பை விட அதிக படங்களில் தற்போது கமிட் ஆகியுள்ளார். மேலும் பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது இவருக்கு புது அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த ஆண்டு நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் சிறப்பு பேச்சாளர்களில் சமந்தாவும் ஒருவர்.
தென்னிந்திய அளவில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளும் முதல் நடிகை சமந்தா என்பது குறிப்பிட தகுந்தது. பேமிலி மேன் 2 சீரிஸ் நடித்ததற்கு சமந்தாவுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழா நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெற உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்