தென்னிந்திய ரசிகர்களுக்கு Top most பேவரைட் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு சினிமா பக்கம் தன் கவனத்தை செலுத்தினாலும் நீதானே பொன்வசந்தம், நான் ஈ, தெறி ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கட்டி போட்டார். இவர் தன் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை பிரிந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்த பிரிவிற்கு காரணம் பல மாதங்களாக வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் காபி வித் கரண் நிகழ்ச்சியில், சமந்தாவிடம் கணவர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட பிரிவு பற்றி தொகுப்பாளர் கரண் ஜோகர் கேள்வி எழுப்பினார். அப்பொழுது சமந்தா இடைமறித்து ‘அவர் என்னுடைய கணவர் அல்ல, முன்னாள் கணவர் என்று கூறுங்கள்’ என கூறியுள்ளார்.
மேலும், ‘நாக சைதன்யா எனக்கு நல்ல கணவராக இல்லை, ஒரு எமன் போல நடந்து கொண்டார்.. இருவருக்கும் நடந்த திருமண வாழ்க்கை சண்டை சச்சரவு வாழ்க்கையாகவே இருந்தது.. நாங்கள் ஒருவருக்கொருவர் பக்கத்தில் இருக்கும் பொழுது என் மீது எரிந்து தான் விழுவார்’ என மிகவும் ஆதங்கத்துடன் பதில் அளித்துள்ளார். இவ்வளவு நாள் அமைதி காத்த சமந்தா தற்போது இவ்வாறு பேசி இருப்பது ரசிகர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்