சமந்தாவின் மாஜி கணவர் நாகசைதன்யா, தனது வாழ்வில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த பகிரங்க நிகழ்வு ஒன்றை ஒரு நிகழ்ச்சியின் பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடிகர் வெளிப்படை :
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்காண்டுகள் வரை நீடித்த இவர்கள் திருமண வாழ்க்கை, திடீரென முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து செய்து பிரிய போவதாக அறிவித்தனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தற்போது தொடர்ந்து, இருவரும் சினிமாவில் பிஸியாக உள்ளனர். நாக சைதன்யா மற்றும் அமீர்கான் நடிப்பில் அண்மையில் வெளியாகிய லால் சிங் சத்தா திரைப்படம் தொடர்ந்து பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. இந்த நிலையில், அண்மையில் நாக சைதன்யா அளித்த பேட்டியில் சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது, சில ஆண்டுகளுக்கு முன் ஹைதராபாத்தில் காருக்குள் ஒரு பெண்ணிடம் நெருக்கமாக இருந்தேன் என்றும், அப்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன் என்றும் தெரிவித்தார். உள்ளே எப்படி இருந்தேன் என்பது எனக்கு தெரியும். அதனால் நான் பயப்படவில்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இவருக்கு சமந்தாவுடன், 2017ல் திருமணம் நடந்தது. இவர், அந்த கார் உறவை சில ஆண்டுகளுக்கு முன் என கூறி உள்ளதால், சமந்தா இருக்கும் போதே நாக சைதன்யா இது போன்ற தவறான உறவில் இருந்திப்பாரோ? என நெட்டிசன்கள் சந்தேகித்து வருகின்றனர்.