அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, இனி சினிமாவில் நீடிப்பது சிரமம் தான் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வெளியான தகவல் :
தென்னிந்திய திரையின் முன்னணி நாயகியான சமந்தா சமீப காலமாக, மயோசிடஸ் என்ற வினோத நோயால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நோய்க்காக எவ்வளவோ சிகிச்சைகள் பெற்றும், இன்னும் இந்த நோய் தீர்ந்த பாடில்லை. இந்த நோயின் தாக்கத்துடனேயே தொடர்ந்து, தான் நடித்து வரும் சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷன்களில் பங்கெடுத்து வந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில், சமந்தாவுக்கு வந்துள்ள இந்த அரிய வகை நோய் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. குளிர்காலத்தில் அதிகமாக பரவும் இந்த நோய், 2 வகைகளைச் சார்ந்ததாம். இந்த நோயால் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்ற கூடுதல் நோய்கள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிக விலைக்கு விற்கும் வாரிசு, துணிவு டிக்கெட்கள்.., வன்மையாக கண்டித்த தமிழக அரசு!!
இதனால், சமந்தா சினிமாவில் இருந்து முழுவதுமாக விலக வாய்ப்புள்ளதாக, அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி சமந்தா மீண்டும் புத்துணர்ச்சியுடன் என்ட்ரி தருவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.