ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா!!!

0

தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் வளர்ந்து வரும் முன்னணி நடிகையா சமந்தா இருக்காங்க. இவங்க ரெண்டு மொழிகளிலும் நடிச்சிட்டு இருக்காங்க. இவங்க சமீபத்துல பேமிலி மேன்னு ஒரு வெப் சீரிஸ்ல நடிச்சாங்க. இந்த சீரிஸ் ஹிந்தியில் வெளி ஆகியிருக்கு, அதுமட்டுமில்லாம நல்ல ஹிட்டாகியுள்ளது, ஆனா இந்த சீரிஸ் ரிலீஸ்ல நிறைய பிரச்சனைகள் வந்தது, இதில் சமந்தா நடித்த ராஜி கதாபாத்திரம் ஒரு போராளி கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில இலங்கை தமிழர்களை இழிவு படுத்துறமாதிரி இருந்ததா சர்ச்சை இருந்தது , இதனால பல அரசியல் கட்சிகள் இந்த சீரிஸ் ரிலீஸ் ஆக கூடாதுன்னு தடை செய்யனும்ன்னு பல பிரச்சனைகள் வந்துச்சு. இதையும் மீறி பேமிலி மேன் சீசன் 2 வெப் சீரிஸ் ஜூன் 4 ரிலீஸ் ஆச்சு . இந்த வெப் சீரிஸ் நல்லா மக்களிடையே ரீச் ஆச்சு. இருந்தாலும் இந்த பிரச்சனை தொடர்ந்துக்கிட்டே இருந்தது. இதற்க்கு சமந்தா கிட்ட இருந்து எந்த பதிலும் வரல. இப்போ முதல் முறையாக சமந்தா இதற்க்கான பதிலை சொல்லிருக்காங்க. யாரோட மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை, இதான் கதாபாத்திரம். அப்படி யாரு மனதையும் புண்படுத்திருந்தா என்னை மன்னிச்சிடுங்கன்னு சமந்தா அவங்களோட பேன்ஸ் எல்லாருக்கும் ஒரு அதிர்ச்சியான செய்தியை சொல்லிருக்காங்க. சில மாதங்களுக்கு நடிக்கமாட்டாங்கன்னும் இடைவெளி விட போறதா சொல்லிருக்காங்க. அப்போ நடிச்சிகிட்டு இருக்க படத்துக்கு என்ன பதில் சொல்லப்போறாங்க தெரில. அநேகமா முடிச்சிட்டு தான் இடைவெளி எடுப்பாங்கன்னு எதிர்ப்பாக்குறாங்க..

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here