சமந்தா-நாகசைதன்யா விவகாரம் – சகஜ நிலைமைக்கு திரும்பினார்களா?? வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0
முன்னாள் கணவருடன் இருக்கும் வில்லங்க போட்டோவை வெளியிட்ட நடிகை சமந்தா., அதிர்ந்து போன ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கும் நாகசைதன்யாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வருவதாக செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது அதுகுறித்த முக்கிய தகவல் வைரலாகி வருகிறது.

சமந்தா அக்கினேனி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இவருக்கும் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவிற்கும் திருமணம் நடைபெற்றது. ‘ஏ மாயம் சேஸ்தாவ்’ படத்தில் தான் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. நீண்ட வருடங்கள் காத்திருப்பிற்கு பிறகு தான் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

சமந்தா-நாகசைதன்யா விவகாரம் - சகஜ நிலைமைக்கு திரும்பினார்களா?? வைரலாகும் ட்விட்டர் பதிவு!!
சமந்தா-நாகசைதன்யா விவகாரம் – சகஜ நிலைமைக்கு திரும்பினார்களா?? வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

இப்படி இருக்க இவர்களின் உறவு நன்றாக போய்க்கொண்டிருந்த வேளையில் இணையத்தில் ஒரு செய்தி பரவியது. அதாவது இருவருக்குள்ளும் எதோ பிரச்சனை என்பது போலவும், இருவருக்கும் விவாகரத்து ஆகப் போவது போலவும் செய்திகள் வைரலாகி வந்தது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இது பற்றிய சமந்தா தரப்பில் எந்த ஒரு எதிர்ப்பும் வெளியாகவில்லை.

இப்பொழுது நாகசைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து தெலுங்கில் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்து வருகின்றனர். தற்போது அந்த படத்திற்கான முன்னோட்டம் வெளிவந்த நிலையில் சமந்தா சாய் பல்லவியை மட்டும் மென்ஷன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏன் அவர் நாக சைதன்யாவை குறிப்பிடவில்லை என்ற கேள்வி அனைவர்க்கும் உள்ளது. ஆனாலும் நாகசைதன்யா அந்த பதிவுக்கு நன்றியும் கூறி பதிலளித்துள்ளார். இப்படி இருவரும் சகஜமாக இருக்கும் அவர்களுக்குள் பிரச்சனையா??என்று பலருக்கும் சந்தேகம் அதிகரித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here