தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவிற்கும் அவரது கணவரான நாகசைதன்யாவிற்கும் இடையே பிரச்சனை இருப்பதாக தகவல் அடிபட்டு வந்த நிலையில் மீண்டும் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
சமந்தா அக்கினேனி
மாடலிங் துறையில் இருந்த சமந்தாவிற்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைக்க அதன் மூலம் பிரபலமானார். மேலும் தமிழில் மாஸ்க்கோவில் காவேரி திரைப்படத்தின் மூலம் நடித்து அறிமுகமானார். தெலுங்கில் சமந்தா திரைப்படம் ஹிட் அடிக்கவே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்தடுத்து படங்கலும் அவருக்கு ஹிட் அடிக்க முன்னணி நடிகையாக வலம் வந்தார். 2017 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. நாளுக்கு நாள் கவர்ச்சியிலும் எல்லை மீறி கொண்டு சென்றார். இப்பொழுது அவர் நடித்து வெளியான ‘தி பேமிலி மேன்’ திரைப்படத்தை பார்த்து நாகசைதன்யா குடும்பத்தினர் சமந்தாவை கண்டித்துள்ளனர்.
இனிமேல் இந்த மாதிரி நடிக்க கூடாது என்றும் கூறியுள்ளனர். இதனால் தான் சமந்தா மற்றும் நாகசைதன்யா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் சமந்தா வெளியிடவில்லை.
இப்படி இருக்க லவ் ஸ்டோரி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சமந்தாவை பற்றி நாகசைதன்யாவிடம் கேட்க அதற்கு சமந்தாவை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்க கூடாது என்று சொல்லியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்