மகளை சுத்தியலால் அடித்து தானும் தற்கொலை செய்துகொண்ட தந்தை – சேலத்தில் நடந்த சோகம்!!

0

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே தனது மகளை சுத்தியால் அடித்து கொன்று தானும் தற்கொலை செய்துள்ளார் தந்தை. இதனால் அந்த பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டம் அருகே உள்ள எடப்பாடி என்னும் ஊரில் ஆதிக்காட்டூரை சேர்ந்த கோபால் மற்றும் மணி தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு ரமேஷ் கண்ணா என்ற மகனும் மற்றும் பிரியங்கா என்னும் மகளும் உள்ளனர். கோபால் மன நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது இங்கு வந்துள்ளார். இவரது மகன் ரமேஷ் கண்ணா காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவரது அம்மா கரும்பு வெட்டும் தொழிலுக்காக வெளியூருக்கு அடிக்கடி சென்று விடுவார். எனவே பெரும்பாலும் கோபால் மற்றும் பிரியங்கா தான் வீட்டில் ஒன்றாக இருந்து வருவார்கள். மேலும் கோபாலை அந்த ஊரில் உள்ளவர்கள் கிறுக்கன் என்று அழைத்து வருவார்களாம். இதனால் கோபால் செம கடுப்பாகி உள்ளார். மேலும் நேற்று பிரியங்கா பேச்சுவாக்கில் தனது தந்தை கோபாலை கிறுக்கன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபால் ஊரில் உள்ளவர்களை போல் நம் மகளும் நம்மை பார்த்து கிறுக்கன் என்று கூறிவிட்டார் என்று கோவப்பட்டு சுத்தியலால் அவரை அடித்து கொன்றுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டியில் மோதும் ஒசாகா மற்றும் பிராடி!!

கொலை செய்த பின்பு தனது தம்பிக்கு கால் செய்து, இதேபோல் கொலை செய்துவிட்டேன் என்று கூறினார் கோபால். ஆனால் இதனை அவரது தம்பி குடும்பத்தார் இதனை நம்பவில்லை. இதனால் பிளேடால் கழுத்தை கீறிக்கொண்டே தனது தம்பி வீட்டிற்கு சென்று அனைவரையும் அழைத்து வந்தார் கோபால். அங்கு வந்து பார்க்கையில் பிரியங்கா ரத்த ஆற்றில் மிதந்தார். மேலும் தான் கொலை செய்ததை அறிந்த கோபால் யாருக்கும் தெரியாமல் தனது வீட்டின் மாடிக்கு சென்று தற்கொலை செய்துள்ளார். தற்போது இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இதுகுறித்து தற்போது போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here