
இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப விலைவாசி உயர்வுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்க முடியாததால் அனைத்து துறை ஊழியர்களும் ஊதிய உயர்வை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடகா மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வருகிற மார்ச் 21ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் செய்யவுள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அமைச்சர்கள் பலரும் போக்குவரத்து ஊழியர்களிடம் 2, 3 நாட்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் 15 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று அறிவித்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் பொது மக்களின் ஆதரவை பெறுவதற்காக அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் என ஒவ்வொருவர்களின் கோரிக்கைகளையும் மாநில அரசு நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.