ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினால் அவர்களது ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
அரசு எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த 20 ஆம் தேதி நிதி அமைச்சர் PTR. பழனி வேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஒவ்வொரு துறையும் சட்டசபையில் தங்களுக்கு வேண்டிய கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் வரும் 30 ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளுக்கான மானியக் கோரிக்கை சட்டசபையில் அறிவிக்கப்பட உள்ளது. ஆனால் இந்த நாளன்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், சங்க உறுப்பினர்கள் அனைவரும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அரசு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதாவது மார்ச் 30 ஆம் தேதி அலுவலர்கள், உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினாலோ அல்லது வேலைக்கு வராமல் இருந்தாலோ அவர்களது ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.