இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக வந்த வதந்திகளை மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தோனி வியாழக்கிழமை மீண்டும் துடைத்தார் ட்வீட் செய்த சாக்ஷி பதில் அளித்த நிலையில் சில நிமிடங்கள் கழித்து தன்னுடைய ட்வீட்டை நீக்கிவிட்டார்.
கடுப்பான சாக்சி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் கடந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இந்நிலையில் இவரின் ஓய்வு தான் தற்போது டிரெண்டிங் டாபிக்காக மாறியுள்ளது. நேற்று இரவில் திடீரென #DhoniRetires என்ற ஹேஸ்டாக் டிரெண்டாக துவங்கியது டோனி ஓய்வு பெறுகிறார் என்று டுவிட்டரில் டிரெண்ட் ஆகி பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால் கடுப்பான தோனியின் மனைவி சாக்சி ட்விட்டர் தளத்திற்கு வந்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “இது வெறும் வதந்தி தான். லாக்டவுன் காலம் மக்களின் மனநிலையை நிலையில்லாததாக மாற்றியுள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என அதில் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் இந்த பதிவை அவர் வெளியிட்ட சிறிது நேரம் கழித்து தோனியின் மனைவி ஷாக்சி அந்த பதிவை நீக்கிவிட்டார்.
தோனியை மீண்டும் களத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம்
இதற்கிடையில் 2020 டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க, ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தோனி பயன்படுத்துவதாக இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கடைசியாக தோனி கடந்த 2019 இல் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தான் பங்கேற்றார்.
அதன் பிறகு இந்திய கிரிக்கெட்டில் அணியில் இருந்து தானே விலகியிருந்தார். மேலும் எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் தோனி பங்கேற்கவில்லை. இதனால் அவரை மீண்டும் கிரிக்கெட் களத்தில் பார்க்க அவரின் ரசிகர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் கடந்த 10 மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடவில்லை. இந்நிலையில் இவரால் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக களமிறங்க முடியாது என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்க துவங்கியுள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |