பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் நடிகை சாக்ஷி அகர்வால். அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பின் தனது கவனத்தை போட்டோ ஷூட் பக்கம் திருப்பி விட்டார். அந்த வகையில் அவரின் புகைப்படங்கள் எல்லாம் எல்லை மீறிய கவர்ச்சியாக தான் இருக்கும். தற்போது அவர் காட்டுக்குள் யானை உடன் நடத்திய போட்டோ ஷூட் ஒன்றில் அந்த யானையை பார்த்து சாக்ஷி பயந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பல விளம்பர படங்கள் மூலம் திரை முன் தோன்றியவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஒரு சில படங்களும் ஒரு சில வேடங்களிலும் நடித்து உள்ளார். அதன் பின்னர் பிக் பாஸ் என்ற பிரமாண்ட நடைமேடை மூலம் தன்னை அனைத்து மக்களுக்கும் தெரிய வைத்து ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாகி கொண்டவர். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பட வாய்ப்புகள் பெற பல முயற்சிகள் எடுத்து வருகிறார். அந்த முயற்சிகளில் ஒன்று தான் போட்டோ ஷூட்.
அந்த வகையில் சாக்ஷியின் புகைப்படங்கள் பெரும்பாலானவை உச்சகட்ட கவர்ச்சியிலையே இருக்கும். சமீபத்தில் அவர் வெளியிட்ட சீஸ் பேக் தெரிய புகைப்படம் படு வைரலான ஒன்று. இதையடுத்து தற்போது அவரின் போட்டோ ஷூட் வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.
அதாவது வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்த எண்ணி காட்டிற்கு சென்று ஒரு யானையை வைத்து போட்டோ ஷூட் நடத்தி உள்ளார் . அப்பொழுது சாக்ஷி அகர்வால் மிகவும் வித்தியாசமான உடையில் யானையின் அருகில் நின்று போட்டோ எடுக்க முடிவு செய்துள்ளார். அவரின் கை யானை மீது பட்டதும் யானை தனது காதை மெல்ல அசைத்தது. இதை பார்த்து பயந்து பதறி ஓடி போனார் சாக்ஷி, பின்பு சிறிது நேரம் கழித்து தைரியத்தோடு யானையின் பக்கம் நின்று போட்டோ ஷூட்டை முடித்து உள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்