சைப் அலி கான் குடும்பத்தினர் முகக்கவசம் அணியாத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவப்பட்ட நிலையில், தன் குடும்பத்தினர் பொறுப்புள்ளவர்கள் என்றும், சட்டத்தை மதிப்போம் என்றும் தெரிவித்து உள்ளார்.
முகக்கவசம் அணியாத வீடியோ:
அப்போது அவர்கள் முகக்கவசம் அணியாமல் வலம் வந்தனர் . இது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வளம் வந்தது . அதில் ஒரு போலீஸார் இங்கு குழந்தைகள் அனுமதி இல்லை என்று கூறுவதும் பின்னர் இவர்கள் முகக்கவசம் அணிவதும் இருந்தது .
சாத்தான்குளம் போலீஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்த விவகாரம் – சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது தமிழக அரசு..!
இந்த நிலைப்பாட்டால் இவர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டனர் .
சைப் அலி கான் கூறியதாவது:
இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டிக்கு பதிலளித்த சைப் அலி கான் , பல நாட்களாக வீட்டுக்குள்ளயே முடங்கி இருந்ததால் தைமூர் அலி கானை வெளிய அழைத்து சென்றதாகவும் , அவர் மிக எச்சரிக்கையாக செயல்பட்டதாகவும் தெரிவித்தார் . மேலும் மக்கள் யாரும் சுற்றி இல்லாதபோது மட்டுமே முகமூடியை அகற்றினார் என்றும் தெரிவித்தார் . ஆனால், அங்கு வேறு சில மக்கள் நடமாட்டத்தை கண்டதும் , குழந்தைகளை வெளியே அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டதாலும் , அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்தார் .
“ஆனால் அது பதிவுசெய்யப்படவில்லை , ஆனால் நாங்கள் பொறுப்புள்ளவர்கள், சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் மற்றும் வீட்டிலேயே தங்கியிருக்கிறோம், இப்போது கூட ஒரு சில குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே தொடர்பு கொள்கிறோம். ” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் .