IPL 2023 தொடருக்கான இறுதி போட்டியில் குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. ஆட்டத்தின் கடைசி தருணம் வரை குஜராத் அணி தான் வெற்றி பெறும் என்ற நிலையில் CSK அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா பவுண்டரி, சிக்ஸரை பறக்க விட்டு அணியை வெற்றி அடைய செய்தார். என்ன தான் CSK அணி வெற்றி பெற்றாலும் கடைசி வரை தோல்வி பயத்திலே இருந்ததற்கு காரணம் குஜராத் அணியின் சாய் சுதர்சன் தான்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தமிழக வீரரான இவர் டிஎன்பிஎல் T20 தொடரில் அதிரடி காட்டி வந்த நிலையில் கடந்த ஆண்டு IPL சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பார்வை சாய் சுதர்சன் மீது விழுந்தது. அந்த சீசனில் இவரை குஜராத் அணி ரூ.20 லட்சத்துக்கு தட்டி தூக்கியது. ஆனால் குஜராத் அணியில் இடம்பெற்ற போதிலும் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருந்த இவருக்கு விஜய் சங்கர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் ஏற்பட்டதால் இவர் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட சாய் சுதர்சன் பவுண்டரி, 1 சிக்சருடன் 31 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதை தொடர்ந்து இந்த ஆண்டு சீசனிலும் அதிரடியாக ஆடி எதிரணியை திணறடித்தார். ஏன் நேற்றைய ஆட்டத்தில் கூட CSK அணிக்கு எதிராக 47 பந்துகளில் 96 ரன் குவித்து எதிரணியை கலங்கடித்தார். இவரின் இந்த அதிரடியான ஆட்டத்தால் தான் CSK அணி வெற்றி கோப்பையை ருசிக்க கடுமையாக போராடியது. இந்நிலையில் குஜராத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாய் சுதர்சனை மற்ற IPL வீரர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.