எனக்கு அந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை – நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்!!

0

மலையாளத்தில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்த நடிகை சாய்பல்லவி தற்போது பாலிவூட்டிலும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகை சாய் பல்லவி:

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் முன்னனி நடிகையாக சாய் பல்லவி திகழ்ந்து வருகிறார். மலையாளத்தில் இவர் நடித்த ப்ரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் முதலில் ஈர்த்தார். இதற்கு பிறகு இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இறுதியாக இவர் நடித்த ஷியாம் சின்கா ராய் திரைப்படம் 24 டிசம்பர் அன்று வெளியானது.

இந்த திரைப்படத்தின் போது எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் எனக்கு பாலிவூட்டில் நடிக்க ஆசை என கூறியுள்ளார். மேலும் எந்தவொரு நல்ல கதையாக இருந்தாலும் அதில் நடிக்க விருப்பம் தெரிவிப்பேன். தமிழ், தெலுங்கு எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் சரி, எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிப்பேன் என பேட்டி அளித்துள்ளார். பொதுவாகவே இந்திய நடிகைகளுக்கு பாலிவுட் கனவு இருப்பது வழக்கம் தானே, அதில் சாய் பல்லவி மட்டும் விதிவிலக்கா என்ன!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here