பங்குனி மாத சிறப்பு பூஜை – சபரிமலை கோவில் நடை திறப்பு!!

0

சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படவுள்ளது.

சபரிமலை:

அனைத்து பகுதிகளிலும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கோவில் போன்ற புனித ஸ்தலங்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை பின்பற்றி திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்கள் நடை திறக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து தற்போது பங்குனி மாத சிறப்பு பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவிலின் நடை மீண்டும் திறக்கப்படவுள்ளது. அதன்படி வருகிற 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை சிறப்பு பூஜைக்காக நடை திறக்கப்படவுள்ளது. அந்த 5 நாட்களில் சிறப்பு பூஜை மாலை 5 மணிக்கு நடைபெறும். சிறப்பு பூஜையை தொடர்ந்து வருகிற 19ம் தேதி பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது. அன்று காலை 7.15 மணிக்கு தந்தரி கண்டரரு ராஜீவரு திருவிழா நடைபெறவுள்ளது.

தலைசிறந்த பெண்மணிகளுக்கான விருது – காணொளி மூலம் விருது பெற்ற தமிழிசை சவுந்தரராஜன்!!

மேலும் வருகிற 27ம் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், 28ம் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு பூஜைக்காக நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கவுள்ளனர். மேலும் தரிசனத்திற்கு செல்வதற்கு பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தி கொரோனா தொற்று ஏற்படவில்லை என்னும் சான்றிதழுடன் வரவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here