அடடே.., உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பாராட்டா.., இந்திய வீரரை கொண்டாடிய தென்னாபிரிக்க ஆல்ரவுண்டர்!!

0
அடடே.., உங்கட இருந்து இப்படி ஒரு பாராட்டா.., இந்திய வீரரை கொண்டாடிய தென்னாபிரிக்க ஆல்ரவுண்டர்!!
அடடே.., உங்கட இருந்து இப்படி ஒரு பாராட்டா.., இந்திய வீரரை கொண்டாடிய தென்னாபிரிக்க ஆல்ரவுண்டர்!!

தற்போதைய T20 போட்டிகளில் இந்திய வீரர் தான் சிறந்தவர் என தென்னாபிரிக்க அணியின் வென் பர்நெல் பாராட்டியுள்ளார்.

சூர்ய குமார்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் இந்தியா, தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி, தற்போது 2வது போட்டிக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் தென்னாபிரிக்க அணியை சேர்ந்த வென் பர்நெல், இந்திய வீரரை புகழ்ந்து பாராட்டியுள்ளார். அதாவது இந்திய அணியில் தற்போது வளர்ந்து வரும் பேட்ஸ்மேன்களில் சூர்ய குமார் தான் சிறந்த வீரராக உள்ளார் என கூறியுள்ளார். மேலும் இவர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் போட்டியில் தனது தனித்துவமான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து T20 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சூர்ய குமார் யாதவ் தான் என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார். மேலும் வென் பர்நெல், ஒரு எதிரணி வீரராக இருந்தாலும் இந்திய வீரரை பாராட்டி இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here