விஜய் ஹசாரே டிராபியில் உத்தரப்பிரதேசம் அணிக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் இரட்டை சதம் அடித்ததுடன் உலக சாதனையும் படைத்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட்:
இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதி சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்த காலிறுதியில், மகாராஷ்டிரா அணிக்கு எதிராக உத்தரப்பிரதேசம் அணி மோதின. இதில், டாஸ் வென்ற உத்திரப்பிரதேச அணி பவுலிங்கை தேர்வு செய்த்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய மகாராஷ்டிரா அணியின் ராகுல் திரிபாதி, சத்யஜீத் பச்சாவ் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
உலக கோப்பைக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான்…, முதலிடத்தை தக்க வைத்த இந்தியா!!
ஆனால், ருதுராஜ் கெய்க்வாட் கடைசி வரை நின்று இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். இதில், ஷிவா சிங் வீசிய 49 வது ஓவரின் முதல் பாலில் சௌரப் நாவலே ஒரு ரன் எடுக்க, ருதுராஜ் கெய்க்வாட் ஸ்ட்ரைக்கில் நின்றார். இவர் இந்த ஓவரின் அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்க விட்டார். இதில், ஒரு நோ பாலும் கூட. அதனையும் ருதுராஜ் கெய்க்வாட் சிக்ஸருக்கு பறக்க விட்ட, ஒரே ஓவரில் 43 ரன்கள் கிடைத்தன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில், ருதுராஜ் கெய்க்வாட் தொடர் 7 சிக்ஸர்களை விளாசி 42 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இவர், இந்த போட்டியில், 159 பந்துகளில் 10 பவுண்டரி, 16 சிக்ஸர் உட்பட 220 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால், மகாராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 330 ரன்களை எடுத்திருந்தது. இந்த சீசனில் தமிழ்நாடு அணியின் ஜெகதீசன் 141 பந்துகளில் 277 ரன்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.