மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகளையும், ஊக்கத்தொகையும் வழங்கி வருகின்றனர். அதன்படி மத்திய அரசு சார்பில் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ரூ.5000 ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த ஊக்கத்தொகைக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ரூ.5000 ஊக்க தொகை மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான முதல் தவணை ரூ.1000 பெண்கள் கருவுற்ற போது வழங்கப்படும். பின் கர்ப்ப கால சிகிச்சையின் போது இரண்டாம் தவணை ரூ. 2000 மும், 3ஆம் தவணையாக குழந்தை பிறந்த பிறகு ரூ.2000 மும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக மக்களே உஷார்., மினரல் கேன் வாட்டரில் இது இருக்கானு பாத்துக்கோங்க?? கேன்சர் அபாயம்!!!
இதனால் இந்த ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் கர்ப்பிணிகள் https://pmmvy.nic.in/Account/Login என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெரும் போது இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம்.