அரசி அட்டை தாரர்களுக்கான கொரோனா நிவாரண நிதி – முதலமைச்சர் இன்று துவக்கி வைப்பு!!

0

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதனை சரி செய்வதற்காக தமிழக முதல்வர் கொரோனாவிற்கான நிவாரண நிதி மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

நிவாரண நிதி:

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக கொடூரமாக மக்கள் அனைவரையும் பாதித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்றின் முதல் அலையை விட தற்போது பரவும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தற்போது கொரோனவினால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதனை சரிசெய்வதற்காக தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று காலை 4 மணி முதல் பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் பல தரப்பு மக்கள் தங்களது வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அதுமட்டுமல்லாமல் சில மக்கள் உண்பதற்கு உணவு இல்லாமலும் தவித்து வந்தனர்.

பெட்ரோல்,டீசல் விலையில் புதிய உச்சம் – வாகன ஓட்டிகள் கவலை!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் எதிரொலியாக இந்த ஊரடங்கின் பொழுது அரிசி அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்றும் அதில் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி முதல் தவணையான ரூ.2000 இன்று முதல் வழங்கபடுகிறது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். நாள் ஒன்றுக்கு சுமார் 200 அட்டை தாரர்களுக்கு நிதி வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here