தமிழகத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து துறையில் அரசு பல முன்னேற்றங்களையும், மாற்றங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில் சேவையை தமிழக அரசு செயல்படுத்தியது. இந்த ரயில் போக்குவரத்தால் சென்னை மக்கள் பெரிதும் பயனடைந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் கோவையிலும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க தேவையான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு சென்னையில் மற்றொரு புதிய திட்டமாக ரோப்கார் சேவையை அறிமுகப்படுத்த ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்திற்குள் நுழைந்த போதை பொருள் கடத்தல் கும்பல்.., முதலமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
அதாவது சென்னை மெரினாவில் இருந்து பெசன்ட் நகர் வரை 4.6 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப் கார் சேவையை செயல்படுத்த போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.