ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்காக ரோஹித் சர்மா மிகப்பெரிய திட்டம் ஒன்றை தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹித் சர்மா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 வது போட்டியில் தோல்வியை தழுவியது. இதனால் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் 4 வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்காக ரோகித் சர்மா பல திட்டங்களை தீட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 3 வது போட்டியில் தோல்விக்கான காரணம் என்னவென்றால் பேட்ஸ்மேன்கள் தான். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க தவறி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 4வது போட்டியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூரியகுமார், கே எல் ராகுல் ஆகிய மூவரில் இருவரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
IND VS AUS.., இந்த வீரர் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார்.., ஆஸி அணியை அச்சுறுத்திய முன்னாள் வீரர்!!!
இவர்களை இந்த 4 வது டெஸ்ட் போட்டியில் களம் இறக்கினால் நிச்சயம் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக தான் இருப்பார்கள். இதை மனதில் வைத்து தான் ரோகித் சர்மா இப்படி ஒரு மாஸ்டர் பிளான் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிளான் போட்டியின் முடிவில் வெற்றியை கொடுக்குமா என பார்க்கலாம்.