இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியின் நேற்றைய டி 20 போட்டியில் இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்தது. தற்போது அவர்களின் வெற்றி குறித்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி 20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அதிலும் குறிப்பாக சூரியகுமார் யாதவ் நேற்று தனது அதிரடியில் இறங்கி அசத்தினார். சர்வதேச போட்டிகளில் தனது முதல் அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினார். மேலும் நேற்றைய போட்டியில் சில சர்ச்சையான முடிவுகளையும் மூன்றாம் நடுவர்கள் தெரிவித்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதன்படி நேற்றைய போட்டியில் பீல்டிங்ன் போது கேப்டன் விராட் கோஹ்லி களத்தில் இருந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்பு களத்தில் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டார். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற நிலை இருந்தது.
நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் யுனிவர்சல் பாஸ் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!
அப்போது பந்துவீச்சாளர் தாகூரிடம் ரோஹித் சர்மா சென்று சில டிப்ஸிகளை கொடுத்தார். இதற்கு பின்பு தாகூர் மிக அற்புதமாக பந்து வீசி முக்கிய மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியின் வெற்றிக்கு இது ஓர் முக்கிய காரணம். தற்போது இதனை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் மிக கடுமையான நேரத்தில் கூட பொறுமையாக வீரர்களை உற்சாகப்படுத்தி வெற்றிக்கு வித்திட்டார் ரோஹித் என்று புகழ்ந்து வருகின்றனர். மேலும் அவர் தாகூரிடம் ஆலோசனை நடத்திய புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.