ஐபிஎல் தொடரின் முடிவில் இந்திய அணி கேப்டன் பதவியில் மாற்றம்?? ஹர்திக் பாண்டியா vs ரோஹித் சர்மா??

0
ஐபிஎல் தொடரின் முடிவில் இந்திய அணி கேப்டன் பதவியில் மாற்றம்?? ஹர்திக் பாண்டியா vs ரோஹித் சர்மா??
ஐபிஎல் தொடரின் முடிவில் இந்திய அணி கேப்டன் பதவியில் மாற்றம்?? ஹர்திக் பாண்டியா vs ரோஹித் சர்மா??

சர்வதேச இந்திய அணி வீரர்கள் அனைவரும் கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது 7 வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. இவரது தலைமையின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி இதற்கு முன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய 6 முறையில், 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

IPL 2023: இறுதிப் போட்டிக்கான வழிகள் எப்படி?? பிளே ஆப் சுற்று குறித்த முழு விவரம் உள்ளே!!

இதனால், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாகவும் மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது. தற்போதும், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளதால், மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஐபிஎல்லின் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்தி வரும் ரோஹித் சர்மா, இந்திய அணிக்கு தலைமை ஏற்று இன்னும் எந்த ஒரு பெரிய தொடரையும் வெல்லவில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களை ரோஹித் சர்மாவின் கீழ் இந்திய அணி வெல்ல தவறியது. இந்நிலையில், நடப்பு வருடமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலக கோப்பை என 2 பெரிய அளவிலான தொடர்கள் நடைபெற உள்ளதால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு, முதலில் ரோஹித் சர்மாவின் மும்பை அணி ஐபிஎல் சிறந்த பங்களிப்பை தந்து, இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை தர வேண்டும். மாறாக, ஹர்திக் பாண்டியாவின் குஜராத் அணியே மீண்டும் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றால், இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக ஹர்திக் பாண்டியா நிச்சயமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here