இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட T20 மற்றும் ODI தொடரில் விளையாட இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. T20 தொடர் முடிவடைந்த நிலையில் 2-1 என இந்திய அணி இந்தாண்டின் முதல் தொடரை இந்தியா வென்றது. இதையடுத்து இன்று கவுகாத்தியில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் பிட்ச் ஆன பர்ஸாபர மைதானத்தில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா (83 ரன்) மற்றும் சுப்மான் கில்லும் (70 ரன்) பந்துவீச்சாளர்களின் ஷாட் பால்களை நாலாபுறமும் சிதறடித்தனர். இப்போட்டியில் ரோஹித் சர்மா 67 பந்தில் 83 ரன் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஓப்பனராக களமிறங்கி அதிவேகமாக 7,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
IND vs SL: விராட் கோலி, ரோஹித் அதிரடி ஆட்டம்…, இலங்கை அணிக்கு 373 ரன்கள் இலக்கு!!
இதைத்தொடர்ந்து விராட் கோலியுடன் ஷ்ரேயஸ் ஐயர் (28 ரன்) மற்றும் KL ராகுல் (39 ரன்) பார்ட்னர்ஷிப் அமைத்து வெளியேறினர். தொடர்ந்து விராட் கோலி 75 பந்தில் 9 பவுண்டரி 1 சிக்ஸர் என 92 ரன்கள் குவித்து சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 12,500 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற மெகா சாதனையை கோலி படைத்து உள்ளார்.