ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி நாளை லண்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது. இதனால் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் எந்த அணி மகுடத்தை சூட்ட போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இந்த போட்டிக்காக ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் ஒரு மாதத்திற்கு மேலாக பயிற்சி பெற்று வரும் நிலையில் இந்திய அணி கடந்த வாரம் தான் இங்கிலாந்து புறப்பட்டது. இந்நிலையில் ரோஹித் சர்மா குறித்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ரோஹித் சர்மா நாளை நடைபெற உள்ள போட்டிக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஆசிய கோப்பை 2023.., பாகிஸ்தானுக்கு முட்டுக்கட்டை போடும் பிற அணிகள்.., வெளியான முக்கிய தகவல்!!!!
இதை வைத்துப் பார்க்கும்போது IPL தொடரில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நிச்சயம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியையும் வெற்றியடைய செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடரில் இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கு சமவாய்ப்பு உள்ளதால் அனைவரும் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர்.