இந்திய அணி இனி வரும் போட்டிகளில் பல திட்டங்களுடன் களமிறங்கப்போவதாக ரோஹித் சர்மா வெளிப்படையாக பேசியுள்ளார்.
ரோகித் சர்மா
இந்திய அணி வீரர்கள் தற்போது உலக கோப்பை தொடருக்கு தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் T20 தொடரில் விளையாட உள்ளனர். இந்த போட்டிகள் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் ரோஹித் சர்மா உலக கோப்பையில் பல புதிய மாற்றங்களுடன் களமிறங்க போவதாக தெரிவித்துள்ளார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அதாவது ஆசிய கோப்பை தொடரில் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்கள் இல்லாததால் கடுமையான தோல்வியை சந்தித்தோம். ஆனால் உலக கோப்பை தொடரில் இது போன்ற எந்த தவறும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தற்போது நல்ல பார்மில் உள்ளனர். அதனால் இனி நடைபெறும் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடும் விதத்தில் பல மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம்.
சென்னை ஓபன் டென்னிஸ்.., தமிழக மண்ணில் பட்டம் வென்ற செக் நாட்டு வீராங்கனை!!!
மேலும் இந்திய அணிக்குள் இதுவரை பல திட்டங்கள் தீட்டியுள்ளோம். தற்போது அந்த திட்டத்தை செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது. இதனால் உலக கோப்பை தொடரில் வெற்றி பெற்று கோப்பையை வெல்வோம் என ரோஹித் கூறியுள்ளார். ரோஹித்தின் இந்த பேட்டி ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதே நேரத்தில் எதிரணிகள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர் . இதனால் வரவிருக்கும் போட்டிகளில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.