IND vs AUS ODI: முதல் போட்டியில் ரோஹித் விலகியதற்கு இதுதான் காரணமா?? வெளியான தகவல்!!

0
IND vs AUS ODI: முதல் போட்டியில் ரோஹித் விலகியதற்கு இதுதான் காரணமா?? வெளியான தகவல்!!
IND vs AUS ODI: முதல் போட்டியில் ரோஹித் விலகியதற்கு இதுதான் காரணமா?? வெளியான தகவல்!!

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விலகி உள்ளதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

ரோஹித் சர்மா:

இந்திய அணியானது 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்கு ஏற்றாற் போல, சர்வதேச அணிகளுக்கு எதிராக போட்டி அணியை பலப்படுத்த முயற்சித்து வருகிறது. இதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக தலா 3 போட்டிகள் கொண்ட 6 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த 6 போட்டிகளில் இந்திய அணி 5ல் வென்று தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதனை தொடர்ந்து, இந்திய அணி தற்போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நாளை மறுநாள் (மார்ச் 17) முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இருந்து மட்டும் கேப்டன் ரோஹித் சர்மா குடும்ப காரணமாக விலகுவதாக அறிவித்திருந்தார்.

வேகப்பந்து வீச்சாளர்களை தேடும் மும்பை இந்தியன்ஸ்…, ஐடியா கொடுக்கும் ஆகாஷ் சோப்ரா!!

இவர், தனது மைத்துனரின் திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதால், தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஹர்திக் பாண்டியா ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை முதன் முறையாக வழி நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here