பங்களாதேஷிற்கு எதிரான தொடர் இந்திய கேப்டன்களுக்கனான சோதனை என முன்னாள் வீரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கே எல் ராகுல்:
இந்திய அணி பங்களாதேஷ்க்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும், 2 டெஸ்ட் தொடர்களையும் விளையாட இருக்கிறது. இந்த தொடர்கள் இந்திய கேப்டன்களுக்கு ஒரு சோதனையாகவே பார்க்கப்படுகிறது. அதாவது, டி20 உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மாவும், துணை கேப்டன் ஆன கே எல் ராகுலும் சொதப்பியே வந்தனர். இந்த உலக கோப்பைக்கு பிறகு இவர்கள் எதிர்கொள்ள இருக்கும் முதல் தொடர் இதுவாகும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இவர்கள் கேப்டன் பொறுப்பிற்கு தகுந்தவர்களாக இருப்பார்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மனிந்தர் சிங் கே எல் ராகுல் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஆசிய கோப்பைக்கு முன்பான ஜிம்பாப்வே தொடரில் இருந்தே கே எல் ராகுல் அச்சத்துடனே விளையாடி வருகிறார் என்று கூறியுள்ளார்.
IPL லிருந்து விலகிய டுவைன் பிராவோ…, மீண்டும் இணைத்துக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்!!
மேலும், முதல் இரண்டு ஓவர்களில் நிலைத்து நின்று விளையாடி விட்டால் தனது அதிரடியை காட்ட தொடங்குவார் என நினைக்கிறேன். இதனால், கே எல் ராகுல், பயப்படாமல் விளையாட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து, கேப்டனாக இருந்தாலும், சிறப்பாக விளையாடினால் மட்டுமே அடுத்ததடுத்த தொடர்களில், அணியில் இடம் பிடிப்பர் எனவும் எச்சரித்துள்ளார்.