ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் தோல்விக்கு பிறகு, ரோஹித் சர்மா இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது போட்டியை நேற்று விளையாடியது. இந்த போட்டியில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, 117 ரன்களுக்குள் சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து, ரோஹித் பேட்டி ஒன்றை அளித்த போது, டெத் ஓவர் ஸ்பெசல்லிஸ்ட்டான பும்ராவை குறித்து சில கருத்துகளை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, பும்ரா இந்திய அணியில் இணைந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகி உள்ளது. இவரது இடத்தை மற்ற வீரர்கள் நிரப்புவது கடினம் தான்.
IPL 2023: CSK அணியில் இணைந்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்!!
ஆனால், முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உம்ரான் மாலிக் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக அணிக்கு கிடைந்துள்ளனர் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, நேற்றையை போட்டி குறித்து ரோஹித், பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தடுமாறுவது ஏமாற்றமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.