ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா அணிக்கு திரும்புவது குறித்து ரோஹித் சர்மா சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.
பும்ரா
இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக T20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் முன்னணி வீரர்களான ரோஹித், விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை தலைமை தாங்க உள்ளார். இதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட், T20 போட்டிகளில் விளையாட உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா அணிக்கு திரும்புவாரா?? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரோஹித், பும்ரா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவரது உடல் நலமும் முன்னேறி வருகிறது.
ஆனால் பும்ரா முழுவதும் குணமானால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குவார். இல்லை என்றால் அடுத்து வரும் முக்கிய தொடர்களில் களமிறங்கலாம் என்று கூறியுள்ளார். ரோஹித்தின் இந்த பதிலை கேட்டு ரசிகர்கள் அனைவரும் பும்ராவுக்கு என்ன தான் ஆச்சு?? என்ற குழப்பத்தில் உள்ளனர்.