கொரோனா தொற்றால் பல பேர் உயிரிழந்து வந்தனர். டெல்லியில் கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் பரவிருந்தது. இப்பொழுது கொரோனவை கட்டுக்குள் கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோன தொற்றை விட சாலை விபத்தால் ஏற்படும் உயிர் பாதிப்புகள் தான் அதிகம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில்லா நாடாக மாற்ற வேண்டும்…
டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறது அரசு, இந்நிலையில் வாகன விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்த விடியோ கருத்தரங்கை தொடக்கி வைத்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. அப்போழுது பேசிய அமைச்சர் உலகில் அதிகம் சாலை விபத்து ஏற்படுகிறது. அதில் 60 சதவீதம் பெரும்பாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் அதிகம் விபத்துக்குள்ளாகிறார்கள் என்றார். கொரோனா தொற்றால் பலியாகும் எண்ணிக்கை விட விபத்தால் ஏற்படும் பலி எண்ணிக்கைதான் அதிகம்.
ஒரு ஒரு ஆண்டும் சுமார் 1.50லட்சம் பேர் விபத்தால் பலியாகிறார்கள். இந்த சாலை விபத்தினை கட்டுப்படுத்த அதிக பாதுகாப்புகள் அளிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் இருசக்கர வாகன போக்குவரத்து பாதுகாப்பு தான் அதிகம் தேவை. இன்னும் சில ஆண்டுக்குள் எந்த ஒரு விபத்தும் ஏற்படாத அளவிற்கு மாற்றியமைக்க வேண்டும். நம் நாட்டில் அனைத்து தொழில்நுட்பங்களும் நல்ல பெயர் பெற்று சிறந்து விளங்கி வருகிறது. எனவே நல்ல சாலைகளை நன்றாக பயிற்சி பெற்ற வாகன ஓட்டிகள் மற்றும் சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது போன்றவற்றை சிறந்து செய்ய வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்