நாடு முழுவதும் கடந்த ஓராண்டுக்குள் சாலை விபத்தில் 1,20,000 நபர்கள் இறந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முக்கிய அறிக்கை:
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் குறைந்து வந்த உயிர் பலி தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அண்மையில் ஆய்வு நடத்தியது. நாடு முழுவதும், நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை தற்போது இந்த ஆவணம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வில் கடந்த ஓராண்டுக்குள் சாலை விபத்தில் 1,20,000 நபர்கள் இறந்துள்ளதாக தெரிவித்தது. இந்த விபத்துகள் அனைத்தும் அலட்சியத்தால் நிகழ்ந்துள்ளதாகவும், இந்த அலட்சியத்தால் மனிதர்களின் விலை மதிப்பற்ற உயிர் பறிபோய் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளது. கடந்த 2020ல் சராசரியாக இந்த சாலை விபத்தால் ஒரு நாளைக்கு 328 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல், இந்த விபத்துக்கான காரணம் என்று சில முக்கிய காரணிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் தாண்டிச் செல்லுதல், சரக்கு வாகனங்களில் அதிக சரக்குகளை ஏற்றுதல், அனுமதியின்றி நபர்களை ஏற்றுதல், மது அருந்தியோ, செல்போனில் பேசிக்கொண்டோ வாகனம் ஓட்டுதல் போன்றவை விபத்துக்கான முக்கிய காரணங்களாக அமைவதாக இந்த காப்பகம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்