பிரபல கோலிவுட் இயக்குனரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர் கே செல்வமணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் மீது, சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மேலே இருந்து கீழ வர இப்படி இருக்கே அனு இம்மானுவேல்.., தவித்துப்போன ரசிகர்கள்!!
பரபரப்பு புகார் :
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர், இயக்குனர் ஆர் கே செல்வமணி. இவர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில், பாக்யராஜ் தலைமையிலான அணியை எதிர்த்து வெற்றி பெற்றார். இவரும், முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசும் இணைந்து கடந்த 2016-ம் ஆண்டு, தனியார் தொலைக்காட்சி பேட்டியின் போது, சினிமா பைனான்சியர் போத்ரா என்பவர் குறித்து சில கருத்துக்களை பதிவிட்டனர்.
இதனால் கோபமடைந்த அவர் இருவர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை, நேற்று நடைபெற்றது. இதில் இருவரும் ஆஜராகாத காரணத்தினால், இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் உத்தரவை பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணை வருகிற ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்