தெலுங்கு காதலுக்கு ஓகே சொன்ன பாக்கிய லட்சுமி ரித்திகா – அப்போ நம்மவூரு பசங்க வேண்டாமா?

0
விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா கதாபாத்திரத்தில் நடிப்பவர் ரித்திகா. அந்த சீரியலில் இவர் கணவனை இழந்த ஒரு பெண். தன் லட்சியத்துக்காக வேறு ஒரு ஊருக்கு தன் மாமனார் மற்றும் மாமியாருடன் வந்து படிக்கவும் செய்து குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார் அம்ரிதா.
 
இந்த கதாபாத்திரம் மூலம் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் குக் வித் கோமாளி. அதில் பாலாவுடன் இவர் செய்யும் சேட்டைகள் அனைவரையும் கவர்ந்தது. தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பாலாவுடன் ஜோடி சேர்ந்து கலக்கி வருகிறார்.
தற்போது இவரின் முகம் தமிழக மக்கள் மனதில் நன்கு நிலைத்துவிட்டது. சமீபத்தில் கூட இவர் தன் சொந்த குரலில் பாடும் காட்சிகள் சீரியலில் இடம்பெற்று ரித்திகாவின் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது விஜய்யின் நடிப்பில் வெளியான தெறி படத்தில் வரும் ‘கல்யாணம் ஆகிடுச்சா.. ஏதாச்சு லவ்..’ என்ற டயலாக்கை தெலுங்கில் பேசி ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘என்ன தெலுங்குல லவ் ப்ரொபோஸ் பண்றிங்க’ என்பது போன்ற கமெண்டுகளை அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamilselvi (@tamil_rithika)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here