கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மற்றும் பாலிவுட் நடிகை ஊர்வசி இவர்களுக்கு இடையிலான விவகாரம் குறித்து, சுப்மன் கில் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
ரிஷப் பந்த்-சுப்மன் கில்:
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி டி20 தொடரை விளையாடி வருகிறது. டி20 உலக கோப்பையில் விளையாடிய சில சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த இந்திய அணியில் சுப்மன் கில், ரிஷப் பந்த், இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில், ரிஷப் பந்துக்கும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்துலாவுக்கும் இடையேயான உறவு நிலை குறித்து முன்பு பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, ஆர் பி என்பவர் 10 பத்து மணி நேரம் என்னை காண காத்து கொண்டிருந்ததாக ஊர்வசி கூற, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரிஷப் பந்த் தேவையற்ற விளம்பரத்திற்காக இப்படி பொய் சொல்லாதீர்கள் என்று தெரிவித்திருந்தார். இதன் பிறகு ஊர்வசி, ரிஷப்பிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
FIFA உலக கோப்பை கால்பந்து: வெற்றியுடன் துவங்க போவது யார்?? கத்தார் vs ஈகுவடார் பலப்பரீட்சை!!
இந்த விவகாரம் குறித்து, ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சுப்மன் கில், ரிஷப் பந்தின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஊர்வசி இது போன்ற வேலைகளை செய்து வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும், ஊர்வசி அவர்கள் யாராவது கிண்டல் செய்ய வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார். ஆனால், ரிஷப் பந்த் இதையெல்லாம் கண்டுக்கவே இல்லை என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.