ஐபிஎல் தொடரை ரிஷப் பண்ட் இழக்க இருப்பதால், டெல்லி அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் கவுரவிக்கும் வகையில் செயல் ஒன்றை செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
ரிஷப் பண்ட்:
கடந்த டிசம்பர் மாதம் இந்திய முன்னணி வீரரான ரிஷப் பண்ட் பயங்கரமான கார் விபத்தில் சிக்கியதால், சமீபகாலமாக காயங்களில் இருந்து மீள்வதற்காக போராடி வருகிறார். இவர் இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தாலும், ஐபிஎல்லில் இவரது இழப்பு பெரியதாக உள்ளது. அதாவது, மார்ச் மாத இறுதியான 31ம் தேதி ஐபிஎல் தொடர் 10 அணிகளுக்கு இடையே கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில், 2016ம் ஆண்டு முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் தனது சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். கடந்த ஆண்டு கேப்டனாக இருந்த இவர், டெல்லி அணியை சிறப்பாக வழி நடத்தி இருந்தார். இவர் தற்போது காயத்தால் அவதிப்படுவதால், ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகி உள்ளார். இதன் விளைவால், டெல்லி கேபிடல்ஸ் அணி, டேவிட் வார்னரை கேப்டனாக நியமித்துள்ளது. இந்நிலையில், ரிஷப் பண்ட் ஐபிஎல்லில் இல்லாதது குறித்து அணியின் பயிற்சியாளர், ரிக்கி பாண்டிங் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த ஒரு காரணத்திற்கு தான் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு தேவை…, வெளியான புள்ளி விவரம் இதோ!!
அவர் கூறியதாவது, ரிஷப் பண்ட் இல்லாதாது அணியில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் என அனைத்து வடிவிலும் சிறந்து விளங்க கூடிய வீரராக திகழ்ந்தவர் என ரிக்கி பாண்டிங், ரிஷப் பண்ட் குறித்து கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ரிஷப்பின் சட்டை எண்ணை, தனது ஜெர்சி மற்றும் தொப்பியில் அணிந்து அவரை கவுரவிக்க இருப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.