தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 3ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10ம் தேதி முதல் தொடங்க உள்ளதால் தகுந்த முன்னேற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் தமிழகம் முழுவதும் 79 மையங்களில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பணிகளில் நியமிக்கப்பட உள்ள ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு சில கட்டுப்பாட்டு வழிமுறைகளை தேர்வுத்துறை வகுத்து வருகிறது. அதாவது விடைத்தாள் திருத்தும் போது மாணவர்களுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மதிப்பெண் வழங்குவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
TNUSRB 2023.., இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!!!!
முன்னதாக இப்பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.