தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு “பணி பாதுகாப்பு சட்டம்” தீர்மானம்., ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!!!

0
தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு
தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு "பணி பாதுகாப்பு சட்டம்" தீர்மானம்., ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!!!

அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை மத்திய மாநில அரசுகள் உயர்த்தி வருகிறது. இதனால் நேற்று முன்தினம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை ஜூலை 1ம் தேதி முதல் 4% உயர்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை சுட்டிக்காட்டிய தமிழக அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களுக்கு ஆறு மாதங்கள் கடந்தும் அகவிலைப்படி உயர்வு குறித்து தெரிவிக்கவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதேபோல் நிலுவை தொகையும் வழங்கவில்லை என பல்வேறு கோரிக்கைகளை பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்தனர். நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும் அரசு பள்ளிகளில் நடைபெற்ற “எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம்” என்ற நிகழ்ச்சியின் போது குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

குழந்தை பருவத்தில் சூர்யா ஜோதிகா நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம்.., இணையத்தில் வைரல்!!

இப்படி அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் பள்ளி வளாகத்திற்குள் வந்து ஆசிரியர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஆசிரியர்களுக்கு “பணி பாதுகாப்பு சட்டம்” கொண்டு வர வேண்டும் எனவும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here