மார்ச் 1 முதல் 2000 ரூபாய் நோட்டு பணப்பரிவர்த்தனை கிடையாது – உஷார் மக்களே..!

0

ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் வங்கி ஏடிஎம் – களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டு உள்ளது. இதனால் இனிமேல் ஏடிஎம் – களில் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்காது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இனிமேல் 2000 ரூபாய் நோட்டு என்ன ஆகும்..?

மத்திய அரசின் கள்ளநோட்டு மற்றும் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் 2016ம் ஆண்டு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது. தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி இனிமேல் ஏடிஎம் – களில் 2000 ரூபாய் நோட்டு கிடைக்காது என தெரிய வருகிறது.

இதனால் 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் – களில் செலுத்த வேண்டாம் என வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதனால் வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தும் போது 2000 நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மார்ச் 1 முதல் 2000 ரூபாய் பணபரிவர்தனைகள் இருக்காது என கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here