நாடு முழுவதும் பொதுமக்களை உலுக்கும் சம்பவமாக நேற்று (ஜூன் 2) இரவு ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. பஜனகா ரயில் நிலையத்தில் நடந்த இந்த விபத்தில் ஹவுரா மற்றும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட சரக்கு ரயில்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. இரவு நேரம் என்பதாலும், வனப்பகுதி என்பதாலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தாமதமாக தொடங்கப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதுவரை 900 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மீட்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை…, சர்ச்சை புகைப்படம் உள்ளே!!
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து சேதமடைந்த ரயில் வழித்தடத்தை சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.