தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3,312 பேருக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் அண்மையில் வழங்கப்பட்டது. இதன் பின்னர் காலியாக உள்ள பணியிடங்களை, தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப உள்ளதாக கல்வித்துறை அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட வில்லை. இதன் காரணமாக TET தேர்வில் தேர்ச்சி பெற்ற பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை பணியமர்த்துவது எந்த வகையில் நியாயம்?.
உலக சுற்றுச்சூழல் தினம் 2023.., யாரும் இதை பயன்படுத்த வேண்டாம்.., முதல்வர் அறிவிப்பு!!
இதன்மூலம் நிலையான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களுக்கு எவ்வாறு தரமான கல்விகளை வழங்க முடியும்?. TET தேர்வில் தேர்ச்சி பெற்ற 80,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு இல்லாமல் பணி நியமனம் வழங்கினால் 15 நாட்களுக்குள் காலிப்பணியிடங்களில் நிலையான ஆசிரியர்களை நியமித்து விடலாம். இதனை உணர்ந்து தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.