அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம் நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பெண்களுக்கு, மிகப்பெரிய அங்கீகாரத்தை அளிக்க உள்ளதாக BSF இயக்குனர் ஜெனரல் பங்கஜ் குமார் சிங் அறிவித்துள்ளார்.
அதிரடி அறிவிப்பு:
அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நாட்டின் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைக்கும் பாரதப் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதன் பிறகு நாட்டின் முப்படை குறித்த சிறப்பு கண்கவர் அணிவகுப்பு நடக்கும். முப்படைகளின் சிறப்பம்சம் மட்டும் அல்லாமல், மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு அடங்கிய அலங்கார ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கும். இதன்படி இந்த ஆண்டு நடக்கவுள்ள அணிவகுப்பில், இதுவரை இல்லாத சிறப்பு ஒன்றை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்கதர்கள் கண்டிப்பாக இதை செய்யணும்.., கேரளா அரசு போட்ட உத்தரவு!!
அதாவது எல்லை பாதுகாப்பு படையின், ஒட்டகக் குழுவில் (BSF) ஆண்களுக்கு நிகராக பெண்களை படையையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் குடியரசு அணிவகுப்பில், ஒரு பகுதியாக இருக்கும் இந்த ஒட்டக குழு படையில் இனி பெண்களின் பங்கும் இருக்கும் என இந்தப் படையின் இயக்குனர் ஜெனரல் பங்கஜ்குமார் சிங் அறிவித்துள்ளார்.