ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ஸ்டோக்ஸ் கையில் ஏற்பட்ட கட்டாயத்தினால் தற்போது தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். தற்போது இவருக்கு மாறாக களமிறங்க போகும் வீரர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பென் ஸ்டோக்ஸ்:
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து பல பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. தொடக்கத்தில் இந்த அணியின் முக்கிய நட்சத்திர பந்துவீச்சாளர் ஆர்ச்சர் காயம் காரணமாக பங்கேற்கமாட்டார் என்று அறிவித்தார். இது இந்த அணிக்கு பெரிய இழப்பாக இருந்தது. காரணம் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்களில் இவரும் ஒருவர். இவர் மிக முக்கியமான நேரத்தில் தனது வேகம் மற்றும் பவுன்சரால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணி வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் இவருக்கும் ஓர் முக்கிய பங்கு உண்டு. இந்நிலையில் இந்த ஆண்டு இவர் இல்லாதது அந்த அணியை பெரும் பின்னடைவு. இந்நிலையில் மேலும் இந்த அணிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தற்போது ஓர் செய்தி வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் ராஜஸ்தான் அணியின் ஆல் ரவுண்டரான ஸ்டோக்ஸ் கடைசியாக நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் பொழுது அவரது கையில் காயம் ஏற்பட்டது.
சாதிக்குமா கோஹ்லி&கோ?? ஐதராபாத் அணியுடன் இன்று பல பரீட்சை!!
அவரது இடது கை விரலில் மிக கடுமையான காயம் எப்பட்டது. இதனால் தற்போது அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இது ராஜஸ்தான் அணியை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இவருக்கு மாற்று வீரராக யார் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்னும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவருக்கு மாறாக கோரி ஆண்டர்சன், கான்வே, பிலிப்ஸ், சோதி மற்றும் ராஸி வான் டெர் டசென் ஆகிய ஐந்து வீரர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.