தமிழகத்தில் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோயாளிகள் அனைவரும் மருத்துவமனைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரெம்டெசிவர் தேவையில்லை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் சித்தா கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. பின்பு அந்த மையம் மூடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதன் காரணமாக தற்போது சில மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது சித்தா கொரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்பு பேசிய அவர், முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி கடந்த ஆண்டு செயல்பட்ட சித்தா சிகிச்சை மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்த மையத்தில் தற்போது 195 பேர் மிதமான அறிகுறிகளுடன் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்தாண்டு இந்த மையத்தில் 2,290 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேசிய அவர் தற்போது சென்னையில் 21 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதனை தற்போது 30 ஆக அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கொரோனாவிற்கு எதிரான 2டிஜி தடுப்பு மருந்து – பயன்பாட்டிற்கு எப்போது??
தற்போது தமிழகத்தில் உள்ள கொரோனா நோயாளிகள் அனைவரும் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் வேண்டும் என்ற எண்ணத்துடன் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். லேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த கொரோனா மையங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. ஆகையால் லேசான அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகள் அனைவரும் ரெம்டெசிவர் மற்றும் ஆக்சிஜன் வசதிகளை தேடி செல்ல வேண்டாம் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.